தமிழர்களின் மிகவும் தொன்மையான நாட்டு மருந்துகள், பச்சிலைகள், வேர்கள் அனைத்தும் ஒருங்கிணைத்து நமது தளத்தில் வைத்திருக்கிறோம்.
மூலிகை உறிஞ்சி
தென்னை மரக்குடி எண்ணெய்
தமிழகத்தின் மிகத் தொன்மையான வலி மருந்துகளில் தென்னை மரக்குடி எண்ணெய் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
எலும்பு முறிவு, தசைப் பிடிப்பு, கைகால் வலி, கழுத்து வலி, போன்றவற்றிக்கு நல்ல தீர்வாகும். தீப்புண், நாற்பட்ட புண்ணிற்கும் நல்ல பலன் அளிக்கும்.
பாதிக்கப்பட்ட பகுதியில் எண்ணெய் தடவி 10 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும். மசாஜ் செய்யும் போது வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். எண்ணெயை சூடு செய்து தேய்த்தால் மேலும் பலன் அளிக்கும்.
30 மில்லி
சொரியோ சஞ்சீவி தைலம்
அளவு: 100 மில்லி
மூலிகைகள்: வெப்பாலை, கருடன்கிழங்கு, அருகம்புல், குப்பைமேனி, வரிக்குமுட்டிக்காய், வேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய்
பயன்படுத்தும் முறை: சொரி, சிரங்கு, அரிப்பு, தேமல், புழுவெட்டு, சொரியாசிஸ், பொடுகு, சர்க்கரைப்புண், போன்றவற்றிற்கு இதை மேலே பூசி அரைமணி நேரம் ஊற வைத்து அரைத்து குளியல் போடி, பாசிப்பயிறு, சீவக்காய் அல்லது அரப்பு தேய்த்து குளிக்கவும்.
மூலிகை கூந்தல் தைலம்
குடுவை : 100மில்லி
உட்பொருட்கள்: மருதாணி, செம்பருத்தி, கரிசலாங்கண்ணி, கற்றாழை, வெட்டிவேர் உட்பட 18 மூலிகைகள்
முடி உதிர்வு நிற்கும்
தலைமுடி கருமை
புழுவெட்டுக்கு தீர்வு கிட்டும்
கூந்தல் வளர்ச்சி அடையும்
இளநரை மறையும்.
ஆண் பெண் குழந்தைகள் அனைவரும் பயன்படுத்தலாம்..
100% இயற்கையானது, தமிழ் சித்தர் பாரம்பரிய முறையில் சித்த வைத்தியரால் தயாரிக்கப்பட்டது.
மூலிகை ஒத்தட முடிச்சு
மூலிகைகள்: நொச்சி, தழுதாலை, விராலி, பிரண்டை, ஊமத்தை, முருங்கை, வாத நாராயணன், முடக்கத்தான், வேலிப்பருத்தி, பூண்டு, இஞ்சி, வெள்ளெருக்கம்பூ, வேப்பெண்ணெய்
பயன்படுத்தும் முறை: அகன்ற மண் சட்டியை அடுப்பில் வைத்து நன்கு சூடுபடுத்தி இந்த முடிச்சினை அதில் ஒத்தி எடுத்து ஒத்தடம் கொடுக்கவும்
பயன்கள்: உடலில் உள்ள அனைத்து வலிகள், பக்கவாதம், அடிப்பட்ட வீக்கம், இரத்தக்கட்டு, போன்றவற்றிற்கு ஒத்தடம் கொடுக்கப் பயன்படுத்தலாம். நல்ல நிவாரணம் கிடைக்கும்.
முடக்கு அறுத்தான் தைலம்
60 மில்லி குடுவை
"சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
காலைத் தொடுவலியுங் கண்மலமும் - சாலக்
கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு
முடக்கற்றான் தனை மொழி"
- சித்தர் பாடல்-
செய்பொருட்கள்: முடக்கத்தான் கீரை, சுக்கு, விராலி, அமுக்கிரா, வாத நாராயணா, விழுதி, கருடன் கிழங்கு, மிளகு, நல்லெண்ணெய்
முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் / முடக்கற்றான். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும்மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான் எனப்பெயர் பெற்றது.
மூட்டு வலி , முடக்கு வாதம் , கைகால் குடைச்சல் ஆகியவற்றை தீர்க்கும்.
கை கால்களில் இந்த தைலத்தை தடவி வந்தால் அனைத்து வழிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
100% உத்திரவாதமான மருந்து.
வலி வாத தைலம்
அளவு: 100 மில்லி
மூலிகைகள்: முருங்கை, வாத நாராயணன், நொச்சி, தழுதாலை, வேலிப்பருத்தி, ஊமத்தை, பிரண்டை, விராலி, நல்லெண்ணெய், புங்கெண்ணெய், கடுகெண்ணெய், கருஞ்சீரக எண்ணெய், சுக்கு, மிளகு, திப்பிலி
பயன்படுத்தும் முறை: வலி தைலத்தை தேவையான அளவு எடுத்து சூடுபடுத்தி உடலில் எந்த பகுதியில் பிரச்சனைகள் இருக்கிறதோ அந்த பகுதியில் நன்கு தேய்த்துவிடவும். பக்கவாதம் மற்றும் முடக்குவாதம் உள்ளவர்கள் வலித்த இடத்தில் சூடுபடுத்தி தேய்த்து அரைமணி நேரம் விட்டு மூலிகை ஒத்தட முடிச்சை சூடுபடுத்தி ஒத்தடம் கொடுக்கவும்.
பயன்கள்: கழுத்து வலி, தோள்பட்டை வலி, முழங்கால் வலி, இடுப்புவலி, பக்கவாதம், குதிங்கால் வலி, இரத்தக்கட்டு, மணிக்கட்டு வலி, நரம்புவலி பிரச்சனைகளுக்கு மேல் பூச்சாக பயன்படுத்தலாம். நாள்பட்ட எலும்பு, நரம்பு பாதிப்புகளுக்கு நல்ல பலன் கொடுக்கும், எண்ணெய் குளியலுக்கு மிகச்சிறந்தது.
புற்று மண் கலவை
எடை: 500 கிராம்
மூலிகைகள்: புற்றுமண், வேப்பிலை சாறு, மாட்டுக்கோமியம், வெட்டிவேர், சந்தனச்சக்கை, விலாமுச்சி வேர் மற்றும் பல.
பயன்படுத்தும் முறை: தேவையான அளவு கலவையை எடுத்து நீரில் கரைத்து உடல் முழுவதும் பூசிக் கொண்டு அரை மணி நேரம் விட்டு குளிக்கலாம் மற்றும் உடலில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தினமும் நீரில் கலக்கி பூசிக் கொள்ளலாம்.
பயன்கள்: உடல் சூட்டை தணிக்கவும், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும், தோல் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கவும், மூட்டுவலி, சைனஸ், தைராயிடு, மார்புச் சளி ஆகியவற்றிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், நல்ல தீர்வும் கிடைக்கும்.