மூலிகை மலர்பானம்
அளவு: 100 கிராம்
மூலிகைகள்: ஆவாரம்பூ, செம்பருத்திபூ, ரோஜா, வெண் தாமரை, சுக்கு, மிளகு, திப்பிலி, நன்னாரி, அதிமதுரம், கொத்தமல்லி
பயன்படுத்தும் முறை: இரண்டு டம்ளர் தண்ணீரில் 1 தேக்கரண்டி மலர் பானம் பொடியை கலந்து அத்துடன் நாட்டு சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீராக சுண்ட வைத்து வடித்து வெறும் வயிற்றில் அதிகாலையில் மற்ற நேரங்களில் எப்போது வேண்டுமானாலும் அருந்தலாம்.
பயன்கள்: சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், இரத்த அடைப்பு, மூச்சு திணறல், சைனஸ், நாள்பட்ட சளி, தோல் சம்பந்தமான வியாதிகள், மலச்சிக்கல், பைலஸ், கர்ப்பபை சம்பந்தமான அனைத்து வியாதிகளுக்கும் ஏற்றது.
நெல்லி சுப்பாரி
வில்வ பழச்சாறு
அளவு: 500 மில்லி
மூலிகைகள்: வில்வப்பழம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், பனைவெல்லம், கிராம்பு
உட்கொள்ளும் முறை: 50மிலி வில்வச் சாறுடன் 100மிலி தண்ணீர் கலந்து காலை மாலை இரு வேளையும் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.
பயன்கள்: குடல்புண், வாய்ப்புண், உடல்சூடு, சர்க்கரை வியாதி, மலச்சிக்கல், கால் எரிச்சல், சோர்வு, தோல் வியாதி
ஆடாதோடை தேநீர் பொடி
100 கிராம்
தொண்டைக் கட்டு, தொண்டை தொற்று நீங்கும், நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் உள்ள சளியை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது, இரத்த நாளங்களில் உள்ள சளியை நீக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், இரத்தத்தில் உள்ள தேவையற்ற உப்பு, கொழுப்பு போன்றவற்றை மாற்றும் தன்மை ஆடா தோடைக்கு உண்டு.
பொடியை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை கலந்து தேநீராக அருந்தலாம்.
உலர் விதைகள் கலந்த தேன்
அளவு:300 கிராம்
உட்பொருள்: பாதாம் கொட்டை, முந்திரி, பிஸ்தா, வாதுமைக்கொட்டை
நீங்கள் உலர்ந்த நட்ஸ் வகைகளை எடுத்துக் கொண்டு வரும் போது உங்க உடலுக்கு தேவையான சக்தியையும் ஆற்றலையும் பெற முடியும். இதிலுள்ள நார்ச்சத்துக்கள் உங்க சீரண மண்டலத்திற்கு உதவுகிறது. இந்த உலர்ந்த பழங்களில் கால்சியம், காப்பர், இரும்புச் சத்து, மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், புரோட்டீன், ரிபோப்ளவின்,, விட்டமின் ஏ, சி, ஈ, கே மற்றும் பி6 மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இது உங்க எலும்புகள், தசைகள், நரம்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது : பாதாம் மற்றும் வால்நட்ஸ் பருப்புகளில் மாங்கனீஸ், பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்துக்கள் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இவை நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க பயன்படுகிறது. அதே மாதிரி தேனில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் தன்மை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்ற உதவுகிறது. அதனால் தான் பாதாம் பருப்பு மற்றும் வால்நட்ஸ் போன்ற பருப்புகளை தேனில் ஊற வைத்து சாப்பிட வலியுறுத்தப்படுகிறது.
நெல்லிச்சாறு
அளவு: 500 மில்லி
மூலிகைகள்: நெல்லிக்காய், மஞ்சள், சுண்ணாம்பு, நாட்டுச்சர்க்கரை
பயன்படுத்தும் முறை: காலை, மாலை சாப்பாட்டிற்கு முன் 50 மில்லி தண்ணீர் கலந்து குடிக்கவும்.
பயன்கள்: ரத்தச்சோகை சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், மலச்சிக்கல், முடி உதிர்தல், மாதவிடாய் பிரச்சனைகள், தலைச் சுற்றல், மயக்கம், தோல் வியாதிகளை குறைப்பதற்கு ஏற்ற உணவு.
கருந்துளசி தேநீர்
நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு மூலிகை. இதில் ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அதிகம் இருப்பதால் நோய்த்தொற்று மற்றும் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும். எனவே இந்த மூலிகை டீயை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
பொடியை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை கலந்து தேநீராக அருந்தலாம்.
துளசி தேன்
அளவு:100 கிராம்
உட்பொருள்: தேன், துளசி
இதில் வைட்டமிங்களில் (A,B,Complex,C,D,E, பங்கு அதிகளவில் உள்ளது. மேலும் தனிமங்களின் சத்துகள் அதிகளவில் உள்ளது நோயற்ற, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான என்சைம் உள்ளது, இவ்வகை சத்துக்கள் வேறு எந்த ஒரு தரமான உணவிலும் இல்லை என்பதே இதன் தனிச்சிறப்பு.
உங்களின் சமையற்கட்டில் அவசியம் இருக்க வேண்டிய ஒன்று தான், "துளசிதேன்". இதனால் இருமல், சளி, மற்றும் பல நோய்களுக்கு எதிரானது.
தேன் உலர் நெல்லி
அளவு:150 கிராம்
உட்பொருள்: தேன், உலர் நெல்லி
தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, இரத்தணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.
தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வருவதன் மூலம், இதய தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.
கண் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும்.
பசியின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் உட்கொண்டு வருவதன் மூலம் சரிசெய்யலாம்.
சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அதுமட்டுமின்றி தொண்டையில் புண்ணும் வரும். அத்தகையவர்கள் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், உடலில் தேங்கிய சளி அனைத்தும் வெளியேறிவிடுவதோடு, தொண்டைப்புண்ணும் குணமாகும்.
தேற்றான் கொட்டை காபி பொடி
-
- இதயத்தை பலப்படுத்தும்
- நீரிழவு நோயை குணப்படுத்தும்
- ஆண்களின் உயிர் எண்ணிக்கையை அதிகரிக்கும்
- கண் நோய்களை குணமாக்கும்
- பெண் இனப்பெருக்க உறுப்பு கோளாறுகளை சரிசெய்யும்
- வெள்ளை படுதலை குணமாக்கும்
- கப நோய்களை குணமாக்கும்
- சீதபேதி மற்றும் வயிற்றுப்போக்கை குணமாக்கும்
- உடலைப் பலப்படுத்தும்
தயாரிக்கும் முறை
அரை தேக்கரண்டி தேற்றான் கொட்டை காபி பொடியை 200 மில்லி தண்ணீர் அல்லது பாலில் கலந்து 2 முதல் 5 நிமிடம் கொதிக்க வைத்து நாட்டு சர்க்கரை அல்லது பனங்கருபட்டி தேவைக்கேற்ப கலந்து பருகலாம்
ஆவாரம்பூ தேநீர்
வல்லாரை தேன்
அளவு:100 கிராம்
உட்பொருள்: தேன், வல்லாரை
இரத்த சுத்திகரிப்பு வேலையைச் செவ்வனே செய்யும்.
உடல்புண்களை ஆற்றும், வல்லமைக் கொண்டது.
தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி குறைய உதவுகிறது, உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது.
மனித ஞாபகசக்தியை வளர்க்கும் வல்லமை கொண்டது.
இதனைக் கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.
நரம்பு தளர்ச்சியை குணமாகி, மூளைச் சோர்வை (Mental fatique) நீக்கி சிந்திக்கும் திறனை அதிகரிக்கும்.
அஜீரணக் கோளாறுகளை குறைக்கும்.
கண் மங்கலை சரி செய்யும்.
சீத பேதியை நிறுத்தும்.
இது தவிர நாள்பட்ட எக்சிமா, பால்வினை நோய்கள் வெண்குஷ்டம் போன்ற பல நோய்களுக்கும் வல்லாரை அருமருந்தாக விளங்குகிறது.
பிரசவத்திற்கு பின் தாயின் உடல்நிலை தேறுவதற்கு வல்லாரை இலைகளை இடித்து சாறெடுத்து, பனங்கற்கண்டோடு சேர்த்து கொடுக்கும் வழக்கம் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் உள்ளது.
சொறி, சிரங்கு, மாரடைப்பு, மாலைக்கண், நீரிழிவு, காக்கை வலிப்பு, காய்ச்சல், பைத்தியம் போன்ற நோய்களையும் வல்லாரை குணப்படுத்துகின்றது.