மூலிகை தலைமுடி மை ( Herbal Hair Dye )
உட்பொருட்கள் : சுருள்பாசி, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, மருதாணி, பெரிய நெல்லிக்காய், கருவேப்பிலை, திருநீற்று பச்சிலை, துளசி, வேப்பிலை, செம்பருத்தி, ரோசா இதழ், சஞ்சீவி இயற்கை மூலிகைகள் உள்ளன.
நன்மைகள்: முடி கொட்டுவது நிற்கிறது, பொடுகை அகற்றும், பித்தம் உடல் சூடு தணிக்கிறது, மிகச் சிறந்த கிருமி நாசினி, வெள்ளை முடிகளை கருப்பாக மாற்றும் தன்மை உடையது.
உபயோகிக்கும் முறைகள்: தேவையான அளவு பொடியை எடுத்து தண்ணீர் தெளித்து கெட்டியாக கலக்கவும், பின் பிரஸ் கொண்டு தலைக்கு பூசவும், 45 நிமிடம் நன்றாக காய வைத்து குளிக்கவும்.
மூலிகை கூந்தல் தைலம்
குடுவை : 100மில்லி
உட்பொருட்கள்: மருதாணி, செம்பருத்தி, கரிசலாங்கண்ணி, கற்றாழை, வெட்டிவேர் உட்பட 18 மூலிகைகள்
முடி உதிர்வு நிற்கும்
தலைமுடி கருமை
புழுவெட்டுக்கு தீர்வு கிட்டும்
கூந்தல் வளர்ச்சி அடையும்
இளநரை மறையும்.
ஆண் பெண் குழந்தைகள் அனைவரும் பயன்படுத்தலாம்..
100% இயற்கையானது, தமிழ் சித்தர் பாரம்பரிய முறையில் சித்த வைத்தியரால் தயாரிக்கப்பட்டது.
தேங்காய் எண்ணெய் மூலிகை கலவை
மூலப்பொருட்கள்: சம்பங்கி விதை, ஆவாரம்பூ, வெந்தயம், வெட்டிவேர், வேம்பால பட்டை, மலைத்துளசி, நெல்லிக்காய், தேவதாரம், வலம்புரி இடம்புரி.
உபயோகிக்கும் முறை: தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு ஊறவைத்து தினசரி பயன்படுத்தலாம்.
பலன்கள்: முடி உதிர்வை தடுக்கும், தலை சூட்டை குறைக்கும், பேண் பொடுகு நீங்கும், இள நரையை தடுக்கும், அடர்த்தியான கூந்தல் வளர உதவுகிறது.
6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்
செம்பருத்தி சாம்பூ – Hibiscus Shampoo
மூலிகை மலர்பானம்
அளவு: 100 கிராம்
மூலிகைகள்: ஆவாரம்பூ, செம்பருத்திபூ, ரோஜா, வெண் தாமரை, சுக்கு, மிளகு, திப்பிலி, நன்னாரி, அதிமதுரம், கொத்தமல்லி
பயன்படுத்தும் முறை: இரண்டு டம்ளர் தண்ணீரில் 1 தேக்கரண்டி மலர் பானம் பொடியை கலந்து அத்துடன் நாட்டு சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீராக சுண்ட வைத்து வடித்து வெறும் வயிற்றில் அதிகாலையில் மற்ற நேரங்களில் எப்போது வேண்டுமானாலும் அருந்தலாம்.
பயன்கள்: சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், இரத்த அடைப்பு, மூச்சு திணறல், சைனஸ், நாள்பட்ட சளி, தோல் சம்பந்தமான வியாதிகள், மலச்சிக்கல், பைலஸ், கர்ப்பபை சம்பந்தமான அனைத்து வியாதிகளுக்கும் ஏற்றது.
தேற்றான் கொட்டை காபி பொடி
-
- இதயத்தை பலப்படுத்தும்
- நீரிழவு நோயை குணப்படுத்தும்
- ஆண்களின் உயிர் எண்ணிக்கையை அதிகரிக்கும்
- கண் நோய்களை குணமாக்கும்
- பெண் இனப்பெருக்க உறுப்பு கோளாறுகளை சரிசெய்யும்
- வெள்ளை படுதலை குணமாக்கும்
- கப நோய்களை குணமாக்கும்
- சீதபேதி மற்றும் வயிற்றுப்போக்கை குணமாக்கும்
- உடலைப் பலப்படுத்தும்
தயாரிக்கும் முறை
அரை தேக்கரண்டி தேற்றான் கொட்டை காபி பொடியை 200 மில்லி தண்ணீர் அல்லது பாலில் கலந்து 2 முதல் 5 நிமிடம் கொதிக்க வைத்து நாட்டு சர்க்கரை அல்லது பனங்கருபட்டி தேவைக்கேற்ப கலந்து பருகலாம்
ஆடாதோடை தேநீர் பொடி
100 கிராம்
தொண்டைக் கட்டு, தொண்டை தொற்று நீங்கும், நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் உள்ள சளியை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது, இரத்த நாளங்களில் உள்ள சளியை நீக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், இரத்தத்தில் உள்ள தேவையற்ற உப்பு, கொழுப்பு போன்றவற்றை மாற்றும் தன்மை ஆடா தோடைக்கு உண்டு.
பொடியை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை கலந்து தேநீராக அருந்தலாம்.