மூலிகை பற்பொடி
அளவு: 50 கிராம்
மூலிகைகள்: கருவேலம்பட்டை, காசிக்கட்டி, ஏலக்காய், கிராம்பு, ஆல விழுது, கண்டங்கத்திரி விதை, இந்துப்பு, சுடுகாய் தோல், நாயுருவி தூள், பச்சை கற்பூரம், சீரகம், எருக்கம்பூ, அக்ரகாரம், ஓமம், சுக்கு, மிளகு, திப்பிலி, நெல்லிக்காய் தோல், தான்றிக்காய் தோல், மாசிக்காய்
பயன்படுத்தும் முறைகள்: காலை மாலை இரு வேளையில் பல்பொடியினை லேசாக விரலால் தேய்த்து 5 நிமிடம் வாய்விட்டு கொப்பளிக்கவும்.
பயன்கள்: சொத்தப்பல், பல்வலி, பல்கூச்சம், பல் ஆட்டம், பல்லில் சீழ் வடிதல், பல்லில் இரத்தம் வருதல், வலுவிழந்த பற்கள் போன்ற பிரச்சனைக்கு நல்ல தீர்வாகும்.
செம்பருத்தி பூ வழலைக்கட்டி
பப்பாளி வழலைக்கட்டி
கற்றாழை வழலைக்கட்டி
பீர்க்கங்காய் நார்
பீர்க்கங்காய் நார் கொண்டு உடலைத் தேய்த்துக் குளிப்பதால் தோல் ஆரோக்கியத்தையும், பளபளப்பான தன்மையையும் பெறும். தோலின் மேலுள்ள பருக்கள் விரைவில் குணமாகவும் உதவி செய்கிறது. உடலின் துர்நாற்றத்தைப் போக்கவல்ல மருத்துவ குணத்தையும் பீர்க்கங்காயின் நார் பெற்றிருக்கிறது.
பாதங்களை பீர்க்கங்காய் நார் கொண்டு தேய்த்து குளித்து வந்தால் பித்த வெடிப்பு நீங்கி பாதம் மென்மையடையும்.
முல்தாணிமட்டி வழலைக்கட்டி
குப்பைமேனி வழலைக்கட்டி
ஆவாரம்பூ வழலைக்கட்டி
மூலிகை கூந்தல் பொடி
அளவு:100 கிராம்
மூலிகைகள்: ஆவாரம் பூ, செம்பருத்தி பூ இலை, சீவக்காய், வெந்தயம், பாசிப்பயிறு, அரப்பு, பூலாங்கிழங்கு, வேப்பிலை, அவுரி இலை, கரிசால்
பயன்படுத்தும் முறை: குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு பொடியை எடுத்து வெந்நீர் கலந்து ஊற வைத்து பின் தேய்த்து குளிக்கவும்.
பயன்கள்: பொடுகு, புழுவெட்டு, முடி உதிர்தல், இளநரை போன்றவை வராமல் தடுக்க பயன்படுகிறது. தலையில் ஈரத்தன்மையை தக்க வைக்கிறது.