Showing 1–12 of 417 results

மாப்பிள்ளை சம்பா அரிசி

43.0096.00
மாப்பிள்ளை சம்பா அரிசியின் மருத்துவம் குணம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது. நரம்புகளுக்கு வலுவூட்டும் மற்றும் ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும். உடலுக்கு வலுவைத் தரக்கூடிய அணைத்து வகையான சத்துகளும் மாப்பிள்ளைச் சம்பாவில் உள்ளது. நீண்ட நாள்பட்ட வயிறு வலி மற்றும் வாய் புண்களை குணப்படுத்தும்.

தூயமல்லி அரிசி

49.0098.00
தூயமல்லி பயன்கள் மக்களின் பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளையும் ஈடேற்றும் தன்மைக் கொண்டது. இந்த நெல்லின் அரிசி மட்டுமல்லாது தவிடும், சத்து  மிகுந்து காணப்படுகிறது. அதிக நோய் எதிர்ப்புச்சக்திக் கொண்ட இது, பலகார வகைகளுக்கும் பழையச் சாதத்துக்கும் ஏற்ற இரகம் உகந்ததாகவும் இதன் நீராகாரம் இளநீர் போன்று சுவையைத் தரக்கூடியதாகவும் கருதப்படுகிறது.

கருப்பு கவுனி அரிசி

105.00210.00
கருப்பு கவுனி அரிசியின் பலன்கள் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கவுனி அரிசியில் செய்த உணவுகளை உட்கொள்வதினால் மிக எளிதில் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

நீர் குருவி #828

60.00
மண்ணால் செய்யப்பட்ட நீர்குருவி, குருவி துளை வழியே நீர் ஊற்றி ஊதினால் அசல் குருவி போல சத்தம் கேட்கும். குழந்தைகள் மிகவும் உவகை கொள்வர்.
Read more

கருங்குருவை அரிசி

49.0098.00
கருங்குறுவை மாமருந்து. பாரம்பரிய நெல் ரகங்களில் மாமருந்தாகப் பயன்படும் ரகம் கருங்குறுவை. சித்த மருத்துவத்தின் முக்கிய மூலப்பொருட்களில் ஒன்றாகக் கருங்குறுவை அரிசி பயன்படுத்தப்படுகிறது.

சொர்ணமசூரி அரிசி

59.00107.00
அதீதமான நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட இந்த நெல் அரிசிக் கஞ்சியில், பித்தம், வாயு போன்ற உபாதைகளுக்கு தீர்வு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த அரிசியைத் தொடர்ந்து உணவாக உட்கொள்வதன் மூலம், பெரும்பாலான நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் எனவும் கருதப்படுகிறது. இப்படி உணவு, உணவு சார்ந்த பலகாரம் மட்டுமல்லாமல் மாமருந்தாக இருப்பதுடன், நோய் எதிர்ப்புச் சக்தியையும் இந்த அரிசி தருவதாக உள்ளது

வரகு அரிசி

60.00118.00
வரகு அரிசி உண்பதால் ஏற்படும் பலன்கள் சிறுதானியமான வரகு அரசியில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. சிறுநீர் பெருக்கியாக விளங்கும் வரகு அரிசி மலச்சிக்கலை போக்குகிறது. உடல் பருமனை குறைக்கிறது. மூட்டு வலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது. வரகு அரிசியில் நார்சத்து அதிகம் உள்ளது. ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். வரகு அரிசியை பயன்படுத்தி உடல் பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.

புழுங்கல் அரிசி வடகம்

175.00350.00
அம்மாவின் நேரடி கைப்பக்குவத்தில் இல்லத்திலேயே வற்றல் தயாரிக்கப்படுகிறது. செய் பொருட்கள்: புழுங்கல் அரிசி, வர மிளகாய், சோம்பு, பெருங்காயம், பூண்டு, உப்பு 

தினை அரிசி

60.00120.00
தினை உண்பதால் ஏற்படும் பலன்கள் எலும்புகளை வலுவாக்கும். குடல் புண், வயிற்றுப் புண்களை குணமாக்கும். செரிமானத்தை மேம்படுத்தும். தோலின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கின்றது. விரைவில் முதுமையடைவதைத் தடுக்கிறது. உடலை வலுவாக்கும் சிறுநீர்ப்பெருக்கும் தன்மைகள் உண்டு. இது மிகச்சூடு உள்ளது. வாயு நோயையும், கபத்தையும் போக்கும். உடலுக்கு வன்மையைக் கொடுக்கும்.

மாங்காய் வத்தல்

60.00150.00
அம்மாவின் நேரடி கைப்பக்குவத்தில் இல்லத்திலேயே மாங்காய் வத்தல் தயாரிக்கப்படுகிறது. செய் பொருட்கள்: முற்றிய மாங்காய், மஞ்சள்தூள், உப்பு   மேலும் விபரம் கீழே குறிக்கப்பட்டுள்ளது

சுரை குடுவை

500.00
நாட்டு சுரைக்காயிலிருந்து தயாரிக்கப்படும் இச்சுரை குடுவை நம் பாரம்பரிய சேமிப்பு பெட்டகத்தில் ஓர் அற்புத பொருளாகும்.  பொருட்கள் நீண்ட நாள் கெடாமல் இருக்க பயன்படும் சுரை குடுவை இயற்கை நமக்களித்த ஓர் வரபிரசாதம். இயற்கை தண்ணீர் குடுவை, இயற்கையான Water jacket, தேன் பல வருடங்களுக்கு புளிப்பு ஏறாமல் கெடாமல் இருக்கும், விபூதி நறுமணம் குறியாயமல் நமத்து போகாமல் பல வருடங்களுக்கு அப்படியே இருக்கும், சித்த வைத்தியர்கள் தயாரிக்கும் பசுபம், சூரணம் பல வருடங்களுக்கு வீரியம் குறையாமல் இருக்கும்.  இயற்கையான பாதுக்காப்பு உபகரணமாக இருக்கும் சுரை குடுவை இயற்கை பேரிடர் வெள்ளம் வரும் பொழுது குடுவையை பிடித்து கொண்டு தப்பலாம்.
Read more

மரபொம்மை #780

35.00
மரத்தினால் செய்யப்பட்ட பாரம்பரியமிக்க விளையாட்டு பொம்மைகள். குழந்தைகள் நெகிழி பொம்மைகளை தவிர்த்து மர பொம்மைகளால் விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டும். நெகிழி பொம்மைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுப்பதுடன் உள்நாட்டு உற்பத்தி பொருட்களை ஊக்கபடுத்தும் நோக்கில் தைத்திங்கள் நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட மர பொம்மைகளை அறிமுகப்படுத்தி உள்ளோம்.
Add to cart