அம்மாவின் நேரடி கைப்பக்குவத்தில் இல்லத்திலேயே மருந்து குழம்பு தயாரிக்கப்படுகிறது.
செய் பொருட்கள்: அதிமதுரம், திப்பிலி, கண்ட திப்பிலி, சதகுப்பை, பட்டை, பரங்கிப்பட்டை, சுக்கு, மிளகு, சீரகம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், மல்லி, மஞ்சள் தூள்
மருந்து குழம்பு மனிதர்களுக்கு ஓர் மகத்துவமான மருந்தாகும், உணவே மருந்து எனும் கூற்றுப்படி இம்மருந்து குழம்பு தலைசிறந்த ரோக நிவாரணி ஆகும்.
மருந்துகுழம்பு உடம்பில் இருக்கும் சளி மற்றும் நீர்க்கட்டை குணப்படுத்தும், வயிற்று வலி செரிமானமின்மை போக்கி ஆரோக்கியம் தரும் மேலும் உடம்பு வலிகளை நீக்கி புத்துணர்வை தரும்.
தற்சமயம் நாம் வாழும் அவசர உலகில் இது போன்ற உணவு பொருட்களை நாமே தயாரிக்க இயலாமல் கடைகளில் வேதியியல் கலந்த உணவு பொட்டலங்களை வாங்கி பயன்படுத்துகிறோம், அதன் பின் விளைவுகள் நம் ஆரோக்கியத்தை பாதிப்பதாக அமைகிறது, அதன் பொருட்டு தான் தைத்திங்கள் நிறுவனம் உணவு பொருட்கள் தயாரிக்கும் பணியில் நேரடி களமிறங்கி உள்ளது, முழுவதும் இயற்கையான முறையில் அம்மாவின் கைப்பக்குவத்தில் தயாரித்து வழங்க முனைந்துள்ளோம். அம்மாவின் அக்கறையும் நேசமும் உங்கள் உணவிலும் இனி தவழும்.
உலகமெங்கும் பரவியுள்ள தைத்திங்கள் நிறுவனம் உலகம் எந்த மூலைக்கும் தன் தயாரிப்புகளை அனுப்பி வைக்கிறது.
மருந்து குழம்பு செய்முறை:
வாணலியில் நல்லெண்ணய் ஊற்றி வெந்தயம் பூண்டு சீரகம் இவற்றை வதக்கி தாளித்து ஊற வைத்த புளிக்கரைசலை ஊற்றி அதில் மருந்து குழம்பு பொடி கலைவையை கலந்து எண்ணெய் மேலே வரும் வரை கொதிக்கவிடவும். விருப்பப்பட்டால் கத்தரிக்காய் முருங்கைக்காய் சேர்த்து கொண்டால் சுவையாக இருக்கும்.
ஆரோக்கியம் மிக்க இம்மருந்து குழம்பை மாதம் ஒரு முறை சமைத்து குடும்பத்தில் அனைவரும் சாப்பிடுவது நலமாகும்.
Reviews
There are no reviews yet.